Saturday 15 November 2014

சிறுவர் பாடும் பாட்டு.



கருப்பு காக்கா மரத்துமேலே
கத்துது கத்துது பாத்துக்கோ
கலந்து உண்ணும் பழக்கத்தை
கண்டிப்பா நீ கத்துக்கோ

ஆந்தைஒண்ணு கண்ணை உருட்டி
அங்கும்  இங்கும் பாக்குது
அக்கம் பக்கம் பாக்கணும்னு
அதுங்கிட்டே நீ கத்துக்கோ

சுறுசுறுப்பாய் எறும்பு கூட்டம்
சுவரின் ஓரம் போகுது
சுறுசுறுப்பாய் வாழ்க்கையிலே
இருக்கும் வழி தெரிஞ்சுக்கோ

ஒன்றன்பின் ஒன்றாய் அது
ஒழுங்காய் இடத்தை கடக்குது
நன்றாய் சாலை விதிகள்பற்றி
.நடக்க  நீயும் கத்துக்கோ

...........................
மூணு சக்கர நடைவண்டி
முன்னே நடக்க உதவுது
அஞ்சிடாமல் அறையிலே
பிஞ்சுக் காலால் நடக்குது
---------------------------------------
ஒண்ணும் ஒண்ணும் பெருக்கிப்பாத்தா ஒண்ணு தானுங்கோ
ஒன்றுக்குமேல் பெருக்கினாலே
எண்கள் தானுங்கோ
ஒண்ணாக நாமிருந்தால்
ஒன்றுமில்லைங்கோ
ஒன்றுக்கு மேலே போனா
தொல்லை தானுங்கோ.

மாடிமேலே மாடியேறி
ஆடினாக்கா ஜாலிதான்
மாடியிலேர்ந்து கீழே விழுந்தா
மனித உயிர் காலிதான்

கூடிவாழும் சுற்றத்திற்கு
அன்பு ஒன்றே வேலிதான்
ஓடிப்போயி தனியாயிருந்தா
நாடிவரும் நஷ்டம்தான்

=================

தேடித்தேடி சேர்த்துசேர்த்து
வைப்பதுதான் நல்லதா?
சேர்த்ததெல்லாம் கைதொடாமல்
செத்துபோனால் நல்லதா?

இருக்கும்போதே தானம்செய்து
இன்பத்தை கூட்டிக்கோ
இருந்துவிட்டு மறைந்தபின்னும்
இறவாப்புகழ் சேர்த்துக்கோ.



காக்கா காக்கா மாடி சுவற்றில்
கத்தி கூட்டம் சேர்க்குது
அம்மா அதை காட்டி காட்டி
நேக்கா சாதம் ஊட்டுது.











அறிவோம்  தெளிவோம்.
ஈச நேசன் மகஸ்ரீ. மடிப்பாக்கம் சென்னை.91

திரு நீறு பூசுவதன் தத்துவம் என்ன?
தீயில் நன்கு எரிந்து பின்னர் தானாகவே நீறு பூத்து வெண்ணிறப் பொடியாகும் பசுஞ்சாண உருண்டைகளே திரு நீறு ஆகும். கிருமிகளை அண்டவிடாத மருத்துவ குணம் அடங்கியது  இதனால் பாக்டீரியாக்களின் எதிர்த் தாக்குதல்கள்  நிகழாது பாதுகாக்கிறது.  தவிரவும் நெற்றியின் மையப்பகுதி ஈர்ப்புத்தன்மை கொண்டது. நெற்றிப் பொட்டின்மீது பார்வையைப் பதித்து தன்வயப்படுத்துவதும், மயங்கவைப்பதும் கூடும். இங்கு ஏற்படும் நீர்க்கேடுகளை நீக்கும் தன்மை திரு நீற்றுக்கு உண்டு, பொதுவாகவே உடல் பகுதிகளில் கெட்ட நீர்த் தன்மையை உரிஞ்சும் தன்மையுடையது திரு நீறு ஆகும்.
        சுமார் 72000 நரம்புகள் ஒன்று சேரும் பகுதியான வர்மத்தன்மையுடைய காதுகள் அருகமைந்த நெற்றியானது தலைப்பகுதியின் முக்கிய இடமாக உள்ளது. திரு நீறு பூசுவதால் உடல் வெப்பம் தணிக்கும். ஜுரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீறு பூசினால் ஜுரம் குறைவதைக் காணலாம். தலைவலி, நீர்கோப்பு ஆகியவைகளை குறைக்கும். இந்து மதத்தில் ஆரோக்கியம் தரும் அம்சங்களையே மக்களை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளனர்.  இதே வகையில் தான் சந்தனம் அணிதலும் பெண்கள் குங்குமம் நெற்றியில் அணிதலும் கடமையாக்கப் பட்டுள்ளது காலை.குளித்தவுடன் நீரில் குழைத்தும் மற்ற நேரங்களில் அப்படியே இடுதலும் வேண்டும். இறை உணர்வினையும் தூண்டவல்ல திருநீற்றின் மகிமை அனேகம்.
     மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
     சுந்தரமாவது நீறு  துதிக்கப்படுவது நீறு
     தந்திரமாவது நீறு  சமயத்தில் உள்ளது நீறு
என  சம்பந்தரின் தேவாரத்தில் விளக்குவதைக் காணலாம்

பஞ்சமியன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றினால் நல்லது என்கிறார்கள். அதை எப்போது ஏற்றுவது நல்லது..

     ஐந்து முக தீபம் ஏற்றுவது என்பதை மிகவும் நல்லதென இந்துமதம் கடைபிடிக்கிறது. இரண்டு முகம் ஏற்றுவதும் அவ்வாரே. எனவே தினமும் இதனை கடிபிடிக்கலாம்.  பஞ்சமி என்பது நல்லதொரு திதியானதாகையால் அன்னாளில் நல்ல நிகழ்வுகள் யாவும் நிகழ்த்தலாம். எனவே மனமுவந்து என்றும் இதை கடைபிடிக்கலாம். லக்ஷ்மிக்குகந்த வெள்ளிக்கிழமையில் பஞ்சமிநாள் எனில் மிகவும்  நலம் சேர்க்கும். கருட பஞ்சமி போன்ற விரத நாட்கள் அதனாலேயே கடைபிடிக்கிறார்கள்.

கோயிலில் சிறு கற்களை அடுக்கி பிரார்த்தனை செய்தால் வீடுகட்டும் யோகம் வருமாமே உண்மையா?
     
அப்படியல்ல. அது அவர்களின் நம்பிக்கை.
வாசலில் தெய்வ உருவத்தை கோலமாக இடலாமா?
      காலில் மிதிபடும் வாய்ப்புக்கள் உள்ள இதுபோன்ற இடங்களில் இறைவனின் உருவங்களை வரைவது சரியல்ல. வீட்டிற்குள்ளும் இதே நிலையை மேற்கொள்ளுதல் வேண்டும்.
பசுவைத் தினமும் தொட்டு வணங்குகிறார்களே ஏன் ? 
       இந்துமதம் பசுவை புனிதமானதாக தெரிவித்துள்ளதும் அதன் மூலம் மனித இனம் பல நன்மைகளைப் பெறுவதும் கண்கூடு.  நலம் தரும் எதனையும் வணங்குவது சிறப்புதானே.
பழையவீட்டைப் புதுப்பித்ததும் கணபதி ஹோமம் செய்ய வேண்டுமா ?
        புதுப்பித்தல் என்பதிலிருந்தே பழமை அகன்றது என்பதுதானே பொருள். அப்படி புதுப்பொலிவு பெற்றதும் துவக்கம் நல்லவிதமாக அமையவேண்டும் என்பது தானே சரியானது, எனவேதான் கணபதியைத்தொழுது நல்வாழ்வை துவக்குவோம் என்பது சரியானதே.
நைவேத்தியத்தை வீட்டில் சமைத்து கோயிலுக்கு எடுத்துச் செல்லலாமா?
    இது சரியானது அல்ல.  அதற்கென ஆலயத்தில் மடப்பள்ளி அமைக்கப் பட்டுள்ளது.  மடப்பள்ளி இல்லாத ஆலயங்களில் அதனை அமைத்துத் தருவதுதான்  நல்லது.
காசியில் தண்டம் கயாவில் பிண்டம் என்பதன் பொருள் என்ன?
       தண்டம் என்பதற்கு உடல் என்றும் பிண்டம் என்பது நீத்தார்களுக்கான அன்னம் என்பதையும் முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.   காசி என்பது முக்தி தரும் தலமாகும். இங்கு உயிர் விடுதல் மிகவும் போற்றுதலுக்கு உரியது. இதை மாயானபூமி என்றே கூறுவர். முக்தி பெற்றுவிட்டால் அங்கே உடலுக்கு வேலையில்லை. எனவே அங்கேயே தகனம் செய்வதும் கங்கையில் அதன் எச்சங்களைச்  சேர்த்தலும் நிகழ்கிறது. உடல் எனும் அவதாரம் செய்யும் பண்பினையுடைய இறைவன் நாராயணன் பாதம் பதித்துள்ள கயாவே பிதுர்களுக்கு அன்னம் [பிண்டம்] அளிக்கும் இடம் என்பதையே இப்படி குறிப்பிடப் படுகிறது.
எல்லா விலங்கும் கடவுளின் படைப்பே. இதில் பசுவிற்கு மட்டும் முக்கியத்துவம் ஏன் ?
    விலங்குகளில் பசு புனிதமானது என முன்னோர்கள் தீர்மானித்தது சரியானது என்றே தெரிகிறது.    எல்லா உணவும் இறைவன் படைத்ததுதான் என்றாலும்  எல்லா இலை, காய் கனிகளை, உணவுகளை நாம் உண்பதில்லையே ஏன்?  விலங்குகளில் பாதிப்பு அதிகமில்லாததும் பலன் தருவதுமான பசுவை நேசிக்கவும் பாதுகாக்கவுமே விலங்குகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது என்பதாகவே எண்ணுகிறேன்.  விலங்குகளை மதிக்கவேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் பல விலங்குகளை தெய்வங்களின் வாகனமாக கருதியே வழிபாட்டு முறை செய்துள்ளதும் கவனத்தில் கொள்வோம்.
சுப நிகழ்ச்சிகள் தடைபடாதிருக்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.

         ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் தனித் தனியே அமைந்திருக்கும். அதுபோலவே கிராம தேவதைகளும் இருக்கும்.  எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் கிராம தேவதைக்கும், குல தெய்வத்திற்கும் முதலில் வழிபாடு செய்யவேண்டும். குலதெய்வம், கிராமதேவதை தெரியவில்லை என்ற நிலை ஏற்படுமானால் விக்கினங்கள் நீக்கக் கூடிய வினாயகருக்கு பூசை செய்வது நல்லது.
எழுச்சூர் சிவன்
               -  தகவல். ஈச நேசன் மகஸ்ரீ.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகி சமேத ஸ்ரீ நல்லிணக்கேஸ்வரர் திருக்கோயில்  ஒரு அற்புதமான ஆலயம். மிகப் பழமை வாய்ந்த இவ்வாலயம் காண்பதற்கு  சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்கையில் படப்பை கிராமம் கடந்து  எழுச்சூர் கூட்டுச் சாலையில் ஸ்ரீபுரம் எனும்பகுதியிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று இவ்வூரை அடையலாம் 
    மிகவும் அருட்சக்தி கொண்ட திரு நல்லிணக் கேஸ்வரரை  தரிசிக்க மஞ்சள், ஆரஞ்சு,வெள்ளை என அரவங்கள் வருவதும், தொழுதுவிட்டு திரும்புவதும் அடிக்கடி நிகழ்கிறது. பக்தர்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாத இச்செய்கை பக்தர்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.
     ஆலயத்தின் தலமரமாக வில்வம் மற்றும் ஏர் அழிஞ்சி மரமும் உள்ளது. Text Box:  
 
 
 
 இது தவிர ‘பெண்பனை’ யொன்று பலகாலமாக கருவரையினை ஒட்டி பின்புறம் வளர்ந்து அருள்வதும் கண்கூடு.  குழந்தை பாக்கியம் வேண்டி இம்மரத்தில் தொட்டில் கட்டுவதும் மழலை இன்பம் பெற்று மகிழ்வதும் உண்மை என அங்கு வந்த பக்தர்கள் வாயிலாக அறிய முடிகிறது. கல்லால மரம், மரமல்லி மரம் போன்ற புனித மரங்களும் இங்கு அமைந்துள்ளன..
     இறைவன் முகம் நோக்கும் நந்தியின் சிறப்பு எண்ணிலடங்காதது ஆகும். தலைமுகடில் சுட்டி, பேசுவதை உன்னிப்பாக கேட்கும் வண்ணம் அமைந்த செவிகள், மழுங்கிய கொம்புகள், மூக்கணாங்கயிறுடன் உள்ள மூக்கின் துவாரம், மூக்கின் வலதுபுறத்தில் நாக்கால் நக்கும் பாவம், அழகான பல்வரிசை, அமர்ந்த நிலையில் வலதுகால் மடிக்காது ஊன்றி இடது கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் திருக்கோலம் மிக அருமை. இதுமட்டுமல்லாது கழுத்தில் சிவ ருத்திராக்ஷமும், சக்தியின் சலங்கையும் தனக்கே உரித்தான மணிகளும் சங்கிலியும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுப்பான தோற்றம் எங்கும் காணக்கிடைக்காத ஒன்று.
        பரமசிவன் பக்கத்திலேயே வள்ளி, தெய்வ நாயகி அம்மைகளுடன் வடக்கு நோக்கிய சாந்த சொரூபமான திரு முகத்துடன் திருமுருகனின் அற்புதக் கோலம்  சாந்த சண்முகர் ஆதலால் இவ்வாலயத்தில் சூரசம்மாரம் நிகழ்வது இல்லை. சஷ்டிவிழா, திருக்கல்யான வைபவ விழா ஆகியவை நடத்தப்பெறுகிறது.
         இவ்வாலய வளாகத்தில் 54வது பீடாதிபதி ஸ்ரீ மகாதேவ சந்திரசேகர ஸ்வாமிகளின்   அதிஷ்டானம் அமைந்துள்ளது.
         இவ்வாலயத்தில் முறையான சிவ வழிபாடுகளுடன் முக்கியமான விழாக்களும் நடைபெறுகிறது.  வடக்கில் அழகிய நீண்ட திருக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது.
          தற்போதய நவராத்ரியை முன்னிட்டு தேவிக்கு விசேஷ பூஜைகளும் உற்சவ அம்மைக்கு அழகான அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.   இவ்வாலயத்தில் மேற்கு நோக்கும் பைரவருக்கும் இராமலிங்க அடிகளாருக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் வடமேற்கு மூலையில் ஸ்ரீ கஜலகஷ்மி பிரதிஷ்டையும் அமைந்துள்ளது.
          உன்னத நலம்பெற, வியாபார வெற்றி காண, குந்தைபேறு கிட்ட ஒருமுறை சென்று தரிசித்து உயர் நிலை பெறுங்கள். தொடர்புக்கு ஆலய அர்ச்சகர் சிவத்திரு கே. இராமமூர்த்தி அவர்களை 9442555187ல் தொடர்பு கொள்ளலாம்.  உங்களது உதவிகளால் ஆலயம் மேம்பாடு பெற்றுத்திகழ உதவுங்கள்.   சிவ நேயப்பேரவையின் மூலம் கார்த்திகை சோமவார ருத்ர ஜபம் போற்றிகள் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.   வருக ஈசன் அருளால் வளம் பெருக.

  

                                      ஸ்ரீ சனீஸ்வரர் வருகிறார் உஷார்.
                                ஈச நேசன் மகஸ்ரீ.

         2.11.2014 அன்று ஸ்ரீ சனீஸ்வரர் துலாராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். 276.01 2017 வரை தன் ஆதிக்கத்தில் வைத்திருப்பார். இவர் தன் ஆதிக்கம், பார்வை ஆகியவை தவிர கோசாரப் பெயர்ச்சி பலனும் அளிப்பார் ஈஸ்வர பட்டம் பெற்ற சனிக்கோள் மிகவும் பலம் வாய்ந்த கிரகம் என்றால் மிகையல்ல.  .

         2.11.2014ல் வக்கிரகதியில் இயங்குவதால் முழுமையான தன் ஆதிக்கத்தை விருச்சிக ராசியில்  16.12.2014 [ மார்கழி 1ல் ] தனது பெயருக்கேற்ப சனிக்கிழமையில் அமர்கிறார்.  இவர்  20.01.2017ல் தனுர் ராசிக்கு மாறிச் செல்வார்.

           நான்குமாத விடுமுறை போல் 20.06.2017ல் மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து 26.10.2017ல் தனுர் ராசிக்குத் வக்கிர நிவர்த்திபெற்று திரும்புகிறார்.  3ம் பார்வை, 10ம் பார்வை யெனும் சிறப்புப் பார்வை கொண்டவர் ஆதலால் இவர் ஆதிக்கம் தனுர் ராசியில் தொடரும்போதும், விருச்சிகராசியில் இருக்கும்போதும் பலவிதமாக பலன்கள் மாறும் வகையில் அமையும்.
        
         ஸ்ரீ சனீஸ்வரர் மாற்றத்தால் எந்த எந்த ராசிக்கு என்னபலன் என்பதை சிறிது காண்போம். விரிவான பலனுக்கு உங்கள் நம்பிக்கையான ஜோதிடரை அணுகித் தெரிந்துக் கொள்ளுங்கள் சில பரிகார முறைகளும்  தரப்பட்டுள்ளது அதனை செயல் படுத்தும் எண்ணத்தை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.


மேஷம்.
          பார்வையின் 8ம் இடத்தில் அமர்வின் மூலம் சனியால் ஏற்படும் எட்டாமிடத்திய பாதிப்புகள் உங்களுக்கு குறைவானதுதான். நல்ல முன்னேற்றங்களும் வெற்றிகளும் கிடைக்கும். என்பதற்கு பல காரணங்கள் உண்டு.   எதிர்ப்படும் சாத்தியக்கூறு தெரிந்துக்கொள்வதால் அதை வெற்றி கொள்ளும் தன்மை உங்களுக்கு கூடும். பாக்கிகள் வசூலாகும் வெளியூர் பயணம் ஏர்படும். படிப்பில் வெற்றிபெறலாம்  .புதிய திட்டங்களை நிறைவேற்றக் கூடும்.  ஆன்மிக நடவடிக்கைகள் பலராலும் பாராட்டு பெறும் சனிபகவானுக்கு கறுப்பு பட்டு சாற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்வதால் கெடுபலன் குறையும்.

ரிஷபம்
           சனிபகவான் அருளினால் பூர்வீக சொத்துக்களை அடையும் பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி அன்பு கூடும் உறவுகளில் நிகழும் நிகழ்ச்சிகளால் சிலவு ஏற்படும்.  எழுத்துலகில் புகழ் சேரும். உத்தியோக உயர்வு கிட்டும். சேமிப்பு எண்ணம் கூடுவதால் பண சேப்பு நிகழும். சிவ வழிபாடு துணை புரியும். புனிதப் பயனம் மேற்கொள்ளலாம்.





மிதுனம்
           6ம் இடத்து சனியால் எதிரிகள் நீங்குவர். நோய் தாக்கம் குறைந்து நலம் பெறுகும்.  இல்லத்தில் சுப  வைபவங்கள் நிகழும். பூர்விக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும் வாய்ப்பு காணப்படுகிறது. இடமாற்றம் நிகழும்..     கணவன் மனைவி கருத்து மாறுபாடு அகலும். வரவேண்டிய பாகிகள் வசூலிப்பதில் தாமதம் ஏற்படும்.  சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏழு வாரம் தொடர்ந்து ஏற்றலாம். பிரதோஷத்தன்று ஆலய வழிபாடு செய்யுங்கள்.

கடகம்.   
           5ம் இடத்தில் சனி மாற்றம் பெறுவதால் வெற்றி உங்கள் பக்கம்தான். கணவன் மனைவி பாசம் கூடும். மாணவர்கள் கல்வி மேலோங்கும். வருமானம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்   சில நேரங்களில் உறவு வகையில் கசப்பான சம்பவங்கள சந்திக்க நேரும். திரு நள்ளாறு, குச்சனூர் போன்ற தல வழிபாடு நன்மை சேர்க்கும்.

சிம்மம்

          பெற்றோர் நலமுறுவர்.  எதிர்ப்புகள் அகலும்.  கடன்வசதிகள் தேவை யென்போருக்கு தாமதமின்றி கிட்டும்.    செய்தொழில் நிச்சயம் ஏற்றம் பெறும்.   அரசில் செல்வாக்கு கிட்டும்  எதிர்பாராத நன்மைகள் நாடி வரும். புதிய கால் நடை வளர்ப்பு தவிர்க்கவும்.  உத்தியோகத்தில் நண்பர்கள் துணைபுரிவர்.    ஒருவார காலம் சனீஸ்வர்ரை தொடர்ந்து தரிசியுங்கள். முடிவு நாளன்று அபிஷேக அர்ச்சனை செய்வதுடன். தானமும் செய்யுங்கள்.

கன்னி
          ஆன்மிக ஆற்றல் பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்படும். பிரயாண இடையூறுகள் தவிர்க்க இயலாதது   நட்பு வட்டம் பெருகும். இல்லத்தில் உறவுகள் அன்பு கிட்டும் சகோதரர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள்.  மன நிலை பாதித்தவர்களுக்கோ உடல் ஊனமுற்றவர்களுக்கோ ஆலய திருப்பணிகளுக்கோ உதவுவதன்மூலம் வாழ்க்கை வளம் பெறும்.


துலாம்
          அண்டை அயலாருடனும் அரசியல் வாதிகளிடமும் அலுவலகத்திலும் எச்சரிக்கை தேவை    பணவசதி கூடும். நல்ல நட்புகள் துணைபுரிவார்கள். விருப்பமான இடத்திற்கு மாற்றம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைத்துறை ஈடுபாடு அதிகரிக்கும். வெள்ளி ஆபரணம் அணிவது நலம் தரும். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை தேவை.  பசுவுக்கு உணவிடுவதும் சனீஸ்வரருக்கு எள் சாதம் படைத்து வினியோகிக்கவும் செய்யலாம்.

விருச்சிகம்

          ஜென்ம சனி துன்பம் சேர்ப்பார் என்றாலும்  மற்ற கோள்களின் அசைவினால் இந்த ராசிக்கரருக்கு புகழும் பொருளும் அதிகமாகும் சுய உழைப்பின் நலம் தெரிந்த இந்த ராசிக்காரர்கள் சரியாக செயல்பட்டு பாராட்டும் பதவி உயர்வும் பெறுவார்கள்.     அசையா சொத்துக்கள் வாங்கும் தன்மையும் சிலருக்கு அமையும். தாயின் அன்பு அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செய்யவேண்டி வரும். அவ்வப்போது வாழ்க்கைத் \துணையால்  பிணக்குகள் வந்து நீங்கும். அன்பு அதிகமாகும். திடீர் தன லாபம் சேர வாய்ப்பு உண்டு. .சிவ வழிபாடும் கருப்பு பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பதும் ந.ல்லது.


தனுசு

           சனிபகவான்  சேமிப்பை நல்குவார்.  தந்தைக்கு உதவும் தன்மை வெளிப்படும்   உழைப்பில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு பெருகும்
தாயாருக்கு ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். அதனால் ஏற்படும் பயணங்களில்  பங்கு கொள்ள நேரும்.  அலுவலகத்தில் மேலதிகாரியாகும் தகுதி வரும் சகோதரர்களிடம் ஏற்படும் கசப்பு நிரந்தரமல்ல. கருப்புத்துணிதானம் செய்யுங்கள். அடிக்கடி நேரம் கிடைக்கும்போது சனிபகவானுக்கு தீபம் ஏற்றுங்கள். குழந்தைகளுக்கு இனிப்பு தாருங்கள்.



மகரம்
            உழைப்பே உயர்வு என்பதை புரிந்து செயல்படும் மகர ராசி அன்பர்களுக்கு நல்ல உயர்வு வரப்போகிறது. கலை நிகழ்ச்சிகளில் கலக்குவீர்கள்.  இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப அபிவிருத்தி மனதுக்கு இன்பம் தரும். வராது எனத் தீர்மானித்தது கிட்டும்  உழைப்பு இல்லாது பணம் வருமானால்  உங்கள் மகிழ்ச்சி அதிகமாகும் அல்லவா? அதுவும் நடக்கும்.  தர்மம் செய்யவும் இறை தரிசனமும் நிகழ்த்துங்கள்


கும்பம்
             தொல்லை பல வரினும் துவளாத உங்க்ளுக்கு வளமும் வசதி குறைவும் மாறி மாறி நிகழும்.  மனதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு கிட்டும் வாய்ப்பு உருவாகும்.  உறவினர்கள் கருத்து வேறுபாடுகள் நிகழலாம்.   கணவன் மனைவி அன்புக்கு பஞ்சமில்லை. சுய தொழில் புரிவோர் லாபம் காணுவர். சனி அமர்வின் பிற்காலத்தில் யாவும் சுகமே..  தயிர் சாத தானமும் கறுப்பு பசுவிற்கு உணவிடுவதும் நல்லது. சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் சனியின் கடுமை குறையும்.               

மீனம்.

            ஆன்மிக எண்ணம் அதிகமாகும். தாய் வழி உதவி கிட்டும். சகோதரர்கள் ஆதாயம் அதிகமடைவார்கள்.  உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.   தந்தைவழி உறவுகள் நெருக்கம் பெருவார்கள்.    திருமண நிகழ்வுகளில் பங்குபெற்று மகிழ்வீர்கள்.  வீடு வாங்குதல் அல்க்லது புதுப்பித்தல் செய்வீர்கள்.  சனியின் வக்கிர காலத்தில் எச்சரிக்கையாக பழகுங்கள்.   நவக்கிரக பூசைகள் செய்வதும் அடிக்கடி ஆலயம் செல்லுவதும் நலம்கொடுக்கும்.


                


 




                                                             






Friday 14 November 2014

மாயம்        [ ஈச நேசன் மகஸ்ரீ ]
Double Brace:  சொன்னேன் பல கவசம் சுகம்பெற வில்லை;
செய்தேன் பலபூஜை செழுமைகள் இல்லை;

நடந்தேன் பல ஊர்கள்  நலம்ஏதும் இல்லை;
கண்டேன் பலகோயில் களிப்பு வரவில்லை;

அளித்தேன் பல தானம் அருள்ஏதும் இல்லை;
அலைந்து திரிந்து  ஆண்டார்குப்ப மடைந்தேன்

ஆறுமுகன் பாலகனாய் அங்கிருக்கக் கண்டேன்
அழகு முகம் கண்டேன் ஆனந்தம் கொண்டேன்

முகம்பார்த்து நின்ற என்னை முறுவலுடன் பார்த்தான்
களித்தேன்  முழுதுடலும் அளித்தேன்  மண்ணில் பட

நெடுங்கிடையாய் பணிந்தேன் துதித்தேன் எழுந்தேன்
முருகா முருகாவென்று முகம் பார்த்து நின்றேன்

நினைத்தேன் எனதுள்ளம் நிறைவாய் நீ புகுந்தாய்
அற்புதமே காட்டினாய் ஆசைகள்  நீக்கினாய்

அருளிய செய்கையால் ஆனந்தம் மிக தந்தான்
தாண்டவ சிவ மைந்தன் ஆண்டார்குப்ப நாயகனே.



[ நல்லாசிரியர் திரு அரிமா மு முரளீதரன் எனக்கு ஆண்டார் குப்பம் முருகனின் குமார சஷ்டி

வைபவ அழைப்பிதழ் அனுப்பியதைக் கண்டதும் உதித்த கவிதை.]