அறிவோம் தெளிவோம்.
ஈச நேசன் மகஸ்ரீ. மடிப்பாக்கம் சென்னை.91
திரு நீறு பூசுவதன் தத்துவம் என்ன?
தீயில் நன்கு எரிந்து பின்னர் தானாகவே நீறு
பூத்து வெண்ணிறப் பொடியாகும் பசுஞ்சாண உருண்டைகளே திரு நீறு ஆகும். கிருமிகளை
அண்டவிடாத மருத்துவ குணம் அடங்கியது இதனால்
பாக்டீரியாக்களின் எதிர்த் தாக்குதல்கள்
நிகழாது பாதுகாக்கிறது. தவிரவும்
நெற்றியின் மையப்பகுதி ஈர்ப்புத்தன்மை கொண்டது. நெற்றிப் பொட்டின்மீது பார்வையைப்
பதித்து தன்வயப்படுத்துவதும், மயங்கவைப்பதும் கூடும். இங்கு ஏற்படும் நீர்க்கேடுகளை
நீக்கும் தன்மை திரு நீற்றுக்கு உண்டு, பொதுவாகவே உடல் பகுதிகளில் கெட்ட நீர்த்
தன்மையை உரிஞ்சும் தன்மையுடையது திரு நீறு ஆகும்.
சுமார் 72000 நரம்புகள் ஒன்று சேரும் பகுதியான வர்மத்தன்மையுடைய காதுகள்
அருகமைந்த நெற்றியானது தலைப்பகுதியின் முக்கிய இடமாக உள்ளது. திரு நீறு பூசுவதால்
உடல் வெப்பம் தணிக்கும். ஜுரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீறு
பூசினால் ஜுரம் குறைவதைக் காணலாம். தலைவலி, நீர்கோப்பு ஆகியவைகளை குறைக்கும். இந்து
மதத்தில் ஆரோக்கியம் தரும் அம்சங்களையே மக்களை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளனர். இதே வகையில் தான் சந்தனம் அணிதலும் பெண்கள்
குங்குமம் நெற்றியில் அணிதலும் கடமையாக்கப் பட்டுள்ளது காலை.குளித்தவுடன் நீரில்
குழைத்தும் மற்ற நேரங்களில் அப்படியே இடுதலும் வேண்டும். இறை உணர்வினையும்
தூண்டவல்ல திருநீற்றின் மகிமை அனேகம்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது
நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது
நீறு
என சம்பந்தரின் தேவாரத்தில் விளக்குவதைக் காணலாம்
பஞ்சமியன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றினால் நல்லது
என்கிறார்கள். அதை எப்போது ஏற்றுவது நல்லது..
ஐந்து முக தீபம் ஏற்றுவது என்பதை மிகவும்
நல்லதென இந்துமதம் கடைபிடிக்கிறது. இரண்டு முகம் ஏற்றுவதும் அவ்வாரே. எனவே தினமும்
இதனை கடிபிடிக்கலாம். பஞ்சமி என்பது
நல்லதொரு திதியானதாகையால் அன்னாளில் நல்ல நிகழ்வுகள் யாவும் நிகழ்த்தலாம். எனவே
மனமுவந்து என்றும் இதை கடைபிடிக்கலாம். லக்ஷ்மிக்குகந்த வெள்ளிக்கிழமையில்
பஞ்சமிநாள் எனில் மிகவும் நலம்
சேர்க்கும். கருட பஞ்சமி போன்ற விரத நாட்கள் அதனாலேயே கடைபிடிக்கிறார்கள்.
கோயிலில் சிறு கற்களை அடுக்கி பிரார்த்தனை செய்தால்
வீடுகட்டும் யோகம் வருமாமே உண்மையா?
அப்படியல்ல. அது அவர்களின் நம்பிக்கை.
வாசலில் தெய்வ உருவத்தை கோலமாக இடலாமா?
காலில் மிதிபடும் வாய்ப்புக்கள் உள்ள இதுபோன்ற
இடங்களில் இறைவனின் உருவங்களை வரைவது சரியல்ல. வீட்டிற்குள்ளும் இதே நிலையை
மேற்கொள்ளுதல் வேண்டும்.
பசுவைத் தினமும் தொட்டு வணங்குகிறார்களே ஏன் ?
இந்துமதம் பசுவை புனிதமானதாக தெரிவித்துள்ளதும் அதன் மூலம் மனித இனம் பல
நன்மைகளைப் பெறுவதும் கண்கூடு. நலம் தரும்
எதனையும் வணங்குவது சிறப்புதானே.
பழையவீட்டைப் புதுப்பித்ததும் கணபதி ஹோமம் செய்ய வேண்டுமா ?
புதுப்பித்தல் என்பதிலிருந்தே பழமை அகன்றது என்பதுதானே பொருள். அப்படி
புதுப்பொலிவு பெற்றதும் துவக்கம் நல்லவிதமாக அமையவேண்டும் என்பது தானே சரியானது,
எனவேதான் கணபதியைத்தொழுது நல்வாழ்வை துவக்குவோம் என்பது சரியானதே.
நைவேத்தியத்தை வீட்டில் சமைத்து கோயிலுக்கு எடுத்துச்
செல்லலாமா?
இது
சரியானது அல்ல. அதற்கென ஆலயத்தில்
மடப்பள்ளி அமைக்கப் பட்டுள்ளது. மடப்பள்ளி
இல்லாத ஆலயங்களில் அதனை அமைத்துத் தருவதுதான்
நல்லது.
காசியில் தண்டம் கயாவில் பிண்டம் என்பதன் பொருள் என்ன?
தண்டம் என்பதற்கு உடல் என்றும் பிண்டம் என்பது நீத்தார்களுக்கான அன்னம்
என்பதையும் முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.
காசி என்பது முக்தி தரும் தலமாகும். இங்கு உயிர் விடுதல் மிகவும்
போற்றுதலுக்கு உரியது. இதை மாயானபூமி என்றே கூறுவர். முக்தி பெற்றுவிட்டால் அங்கே
உடலுக்கு வேலையில்லை. எனவே அங்கேயே தகனம் செய்வதும் கங்கையில் அதன்
எச்சங்களைச் சேர்த்தலும் நிகழ்கிறது. உடல்
எனும் அவதாரம் செய்யும் பண்பினையுடைய இறைவன் நாராயணன் பாதம் பதித்துள்ள கயாவே
பிதுர்களுக்கு அன்னம் [பிண்டம்] அளிக்கும் இடம் என்பதையே இப்படி குறிப்பிடப்
படுகிறது.
எல்லா விலங்கும் கடவுளின் படைப்பே. இதில் பசுவிற்கு மட்டும்
முக்கியத்துவம் ஏன் ?
விலங்குகளில் பசு புனிதமானது என முன்னோர்கள் தீர்மானித்தது சரியானது என்றே
தெரிகிறது. எல்லா உணவும் இறைவன்
படைத்ததுதான் என்றாலும் எல்லா இலை, காய்
கனிகளை, உணவுகளை நாம் உண்பதில்லையே ஏன்?
விலங்குகளில் பாதிப்பு அதிகமில்லாததும் பலன் தருவதுமான பசுவை நேசிக்கவும்
பாதுகாக்கவுமே விலங்குகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது என்பதாகவே
எண்ணுகிறேன். விலங்குகளை மதிக்கவேண்டும்
என்பதற்காகவே முன்னோர்கள் பல விலங்குகளை தெய்வங்களின் வாகனமாக கருதியே வழிபாட்டு
முறை செய்துள்ளதும் கவனத்தில் கொள்வோம்.
சுப நிகழ்ச்சிகள் தடைபடாதிருக்க எந்த வழிபாட்டை
மேற்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் தனித் தனியே அமைந்திருக்கும்.
அதுபோலவே கிராம தேவதைகளும் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் கிராம
தேவதைக்கும், குல தெய்வத்திற்கும் முதலில் வழிபாடு செய்யவேண்டும். குலதெய்வம்,
கிராமதேவதை தெரியவில்லை என்ற நிலை ஏற்படுமானால் விக்கினங்கள் நீக்கக் கூடிய
வினாயகருக்கு பூசை செய்வது நல்லது.