Saturday 1 August 2015





காலற்ற கொம்பற்ற கவிதைகள்

                                        ஈச நேசன் மகஸ்ரீ.- 843 843 7000

      கத்ரு முனிவரின் புத்திரன் ஆதிசேஷன். ஆயிரம் தலை கொண்டவர்   விஷ்ணுவின் படுக்கையாகவும் இருக்கையாகவும்  இருப்பவர்.

      விஷ்ணு பகவான் ஒருசமயம் பலத்த யோசனையில் அமர்ந்திருந்தார். 

      அதை கண்ணுற்ற ஆதிசேஷன் அவரது இந்த நிலைக்கு என்ன காரணம் எனக் கேட்டதும் முன்பு தான் கண்ட சிவபெருமானின் ஆனந்த திருநடனக் காட்சியை எண்ணி இக்கனத்திலும் ஆனந்தத்தில் திளைத்துவிட்டேன். என்றார்.  மகாவிஷ்ணு மகிழும் அத்திருக் காட்சியைத் தானும் காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை மஹாவிஷ்ணுவிடம் ஆதிசேஷன் கூறி அதற்கு அருளுமாறு வேண்டினார்.  

      அத்திரி மகரிஷியின் மனைவியான அனுசுயை சிறந்த பதிவிரதா தர்மத்துடன் விளங்குபவர். அவரது முன்பாக பணிந்து அவரது ஆதரவில் வளர்ந்து சிவபூசை செய்து வந்தால் அத்தகைய காட்சியை காணும் பாக்கியம் உனக்கு கிட்டும் என்றார். திருமாலின் அருளுடன் பாம்பு உடலும் மனித தலையும் கொண்டு சிறு குழந்தையாக மாறி ஆற்றங்கரையில் அஞ்சலி செய்துக் கொண்டிருந்த அனுசுயா தேவியின் கரங்களில் வீழ்ந்து அவரது பாதத்தில் பணிந்தார்.  அஞ்சலி செய்துக்கொண்டிருந்த கரங்களில்பட்டு பாதம் தொழுததால் பதஞ்சலி என பெயர் பெற்றார்.

      சிவபெருமானைக் காணும் அவாமிகுதியால் தில்லைவனம் அடைந்து ஏற்கனவே அங்கு சிவபூசை செய்துக்கொண்டிருந்த வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவருடன் இணந்து சிவபூஜை செய்து வரலானார்.  வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் சிவ நடனம் காண வேண்டும் என்று செய்துவந்த பூசையால் மகிழ்வுற்ற சிவபெருமான் நிச்சயம் ஆன்ந்த்த் திருனடனக் காட்சியளிப்பதாக அசரீரியாக அருளினார்.

      சிவ நடனம் காண ஆவலுடன் காத்திருந்த பதஞ்சலிநாகம் ஒரு பாடல் எழுதவிருப்பதாக வியாக்ரபாதரிடம் தெரிவித்ததும்  வியாக்ரபாதர் விஷமமாக புன்னகைத்தார்.  அருகிருந்த நந்தீஸ்வரர் அதற்கான காரணம் கேட்டதும் காலேயில்லாத  அரவத்தின் ஆசை கால்கொண்டு நடனமாடுவதைப்பற்றிய பாடல் என்றதும் நகைப்பு வந்ததாக கூறியதும் நந்தி தேவரும் கல கலவென நகைத்துவிட்டார்.  இதனால் பதஞ்சலி முனிவர் வருத்தம் கொண்டார்.

      உங்கள் இருவரின் நகைப்பும் எனக்கு வருத்தமூட்டும் வகையில் இருப்பதால்
கொம்பு உள்ள நந்தி தேவர் ஆணவமும் புலிக்கால் அமைந்ததால் வியாக்ரபாதருக்கு உள்ள ஆணவமும் எனக்கு நன்றாகவே புரிகிறது. கொம்பும், காலுமற்ற நான் அதுபோன்ற எழுத்துக்களை அகற்றிவிடுவதுடன் ஓவென நகைத்ததால் ஓகாரமில்லாமலும் பாடல் புணைந்து இறைவன்முன் பாட அனுமதி பெறுவேன் என்று கூறிவிட்டு அத்தகைய பாடலை எழுதி முடித்தார்.

    அந்த பாடல் சரண ஸ்ருங்க ரஹித நடராஜ ஸ்தோத்திரம் எனவும் ஸ்ரீ பதஞ்சலி க்ருதம் எனவும் வழங்கப்படுகிறது.

அந்த மூல கவிதையை காண்போமா.

ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்
பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்|
கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்
சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||      [1]


 
ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்
விரிஞ்சிஸ¤ ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்|
பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்
சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||     [2]


அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ¤ரஸரித்
தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்|
சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|
ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||       [3]


அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்
முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்|
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||        [4]


அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்
கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்|
அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம் 
ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||    [5]


அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்
முகுந்த ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்|
அகம்ப மனுகம்பிதரதிம் ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்
தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||       [6]


பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்
ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ¤மனஸம் ஹிமருசிம்|
அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்
ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||        [7]


 
அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்
குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் தததம்|
முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்
ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||  [8]


அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்
ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ வந்திதபதம்|
உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ¤கந்தி வபுஷம்
பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||       [9]


 
இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி : க்ருதமுக:
ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்|
ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்
கச்சதி பரம் து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்||       [10]


||
ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம். ||



    இந்தப் பாடலை சிவன் முன் பாடி அறங்கேற்றிய பதஞ்சலிமுனிவருக்கும், ரிஷி வியாக்ரபாதர், நகைத்த நந்தீஸ்வரர்  மற்றும் குழுமியிருந்த தேவர்களுக்கும்  பெருத்த ஆச்சர்யம் காத்திருந்தது.    பதஞ்சலியாரின் இப்பாடல் தம்மை வெகுவாக கவர்ந்துவிட்டதாகவும்., எனவெ தாம் அனுதினம் நிகழ்த்தும் பிரதோஷ கால நடனத்தில் இப்பாடலுக்கு இடம்தந்து என் நடனம் நிகழும் என்றார்.   அவ்வாறே தொடர்ந்து பிரதோஷகால நடனத்தில் இப்பாடல் இடம்பெற்று இன்றளவும் நிகழ்த்துவதாக அறியமுடிகிறது.

   அப்படியொரு பாடலை,  தமிழில்  நெடிலின்றி ஓகாரமின்றி  பாடலினை வடிக்க ஆவல் கொண்டு பலபாடல் எழுதியுள்ளேன்.  நெடில் எழுத்து இல்லா கவிதைகளை எழுதிய பின்னர்  ஓகாரம் இடம்பெறா கவிதையை எழுதியுள்ளேன். அதில் ஒன்றை இங்கே அளித்துள்ளேன்.


சிவ மந்திரம்
[ ஓகாரம் ஐகாரம்  நெடிலில்லா கவிதை ]


நமசிவய நமசிவய நல்லநல்ல மந்திரம்
நமசிவய நமசிவய வல்லவல்ல தந்திரம்
நமசிவய நமசிவய உயிருடன் கலந்திடும்
நமசிவய நமசிவய இதயத்து உட்புகும்                1


மசிவயந மசிவயந விளித்திட நற்றவம்
மசிவயந மசிவயந திருசக்தி உறைந்திடும்
மசிவயந மசிவயந முன்வந்து நின்றிடும்
மசிவயந மசிவயந இன்பமது அளித்திடும்             2


சிவயநம சிவயநம  தருமங்கள் என்பது
சிவயநம சிவயநம  மும்மலம் அழிப்பது
சிவயநம சிவயநம  இல்லறம்  இனிப்பது
சிவயநம சிவயநம  நற்பதம்  தருவது.                 3


வயநமசி வயநமசி  சுகமது தருவது
வயநமசி வயநமசி  பற்றுகள் தடுப்பது
வயநமசி வயநமசி  உயர்ந்திட அருள்வது
வயநமசி வயநமசி  பக்தியில் மகிழ்வது               4


யநமசிவ யநமசிவ  யமபயம் அகற்றல்
யநமசிவ யநமசிவ  அற்புதம் செய்தல்
யநமசிவ யநமசிவ  பித்தம் அழித்தல்
யநமசிவ யநமசிவ  மனதினில் கலத்தல்             5



முடிதனில் மதியணிந்து முக்திதந்த லிங்கன்
துடியிடை அழகுடல் உட்கலந்த பரமன்
வடிவழகு சிவநடனம்  கண்டுகளி எண்ணி
அடிமனது எண்ணம் மயங்கிட  நிற்கும்               6


என்னில்உன் எண்ணம்  என்றும் இருக்க
என்னத வம்என உணர்ந்திட வழிசொல்
முன்னம் பழிகள் முழுதும் அழிய
நன்னும்படி உணர்வு நவின்று திருத்து               7


சிவனருள் கிட்டி சித்தம் கலந்திட 
சிவசிவ என்க அவனருள் கிட்டும்
நவவழி உடலில் புகுந்திடும் பிரணவம்
சிவவழி மன்னும் சிரமது சிலிர்க்கும்                 8


சிவன் உறைசுடர் அவன்என உணரின்
தவமது புரிய அவன்முன் விம்மிநில்
அவயவம் முழுதும் அவன் சுடர் பரவும்
சிவன் நம்உள்ளில் இருப்பது புரியும்                   9


தந்திடும் சுகம் வந்திடும் தருணம்
சந்நிதி முன்னமர் சங்கரன் திருஉரு
முந்திடும் வளம் நலம்பெரும் இன்னும்
வந்திடும்  சிவனுள் புகுந்திடும் வழியது             10


முகவரி
ஸ்ரீனிவாசன் M G
5/146 காமராஜர் தெரு,
குரு அடுக்ககம், மடிப்பாக்கம்
சென்னை 600091.