Tuesday 26 May 2015

ஜோதிடம் கற்போம்[ 2 ]
ஞானகுரு.

 
கடந்த இதழில் ராசிகளும் அதில் பங்குபெறும் நட்சத்திரங்கள் பற்றியும் தெரிந்துக் கொண்டோம். இனி.........

12 ராசிகள் அதன் சலனத்தினைப் பொருத்து 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை சரம், ஸ்திரம்., உபயம் என்பனவாம்

மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம்       சரவீடுகள் எனப்படும். இந்த ராசிகளில் பிறந்தவர்கள்  திடீர் முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள்.

ரிஷபம், கடகம், துலாம், கும்பம்           ஸ்திர வீடுகளான இந்த ராசியில் பிறந்தவர்கள்  தாமதித்த முடிவுகளையே எடுப்பார்கள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம்             உபய இராசிகளான இந்தராசி களில் பிறந்தோர்  நிதானமாக  யோசித்து முடிவு மேற்கொள்வர்.

இது தவிர பகல் ராசி, இரவு ராசி, பகலிரவு ராசி எனவும் உள்ளது. அது எது என்று பார்ப்போம். இவ்வகை ராசிகளில் பிறப்பு உதயம் எது என்பதும் குறித்துள்ளார்கள்.

இரவில் வலிமை பெற்றுத் திகழும் இராசிகள். மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம்
இந்த ராசிகளில் பிறப்பு கால்கள் உதிக்கும்

பகலில் வலிமை கொண்டு திகழும் ராசிகள்   மிதுனம், சிம்ம்ம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்    இந்த ராசியில் பிறப்பு தலை உதயம் ஆகும்.

மீன ராசி பகல் மற்றும் இரவு காலங்கள் என நாள்முழுதும்  வலிமையுடன் இருக்கும்
உபயோதர ராசியாகும்.

தவிரவும் ராசிகளின் ஆதிபத்ய உச்ச நீச ராசிகள் எவை என்பதையும் கவனத்தில் கொள்ளுவது அவசியம். ஒவ்வொரு ராசிக்கும் ஆட்சிகிரகம் உண்டு. ஆனால் நான்கு   
இராசிகளுக்கு உச்ச நீச கிரக அமைப்பு இல்லை.










ராசிகள்         ஆட்சி       உச்சம்       நீசம்             நட்பு                                பகை
மேஷம்   செவ்வாய்   சூரியன்      சனி        புதன்,சுக்கிரன்                  சந்திரன்,குரு,ராகு கேது. 

ரிஷபம்    சுக்ரன்      சந்திரன்     ராகு-கேது   செவ்வாய் புதன்,குரு,சனி     ,  சூரியன்

மிதுனம்   புதன்        **            **          சந்திரன்,செவ்வாய் சுக்ரன்,      சூரியன்
                                                குரு, ராகு –கேது.
 
கடகம்     சந்திரன்      குரு       செவ்வாய்   புதன்                        சுக்ரன், சனி, ராகு-கேது.

சிம்மம்     சூரியன்    **           **            குரு                        சந்திரன், செவ்வாய் புதன்,
                                                                            ,சனி சுக்ரன்,ராகு- கேது   

கன்னி      புதன்       புதன்       சுக்ரன்     சந்திரன்,செவ்வாய் குரு          சூரியன்
                                              ,சுக்ரன்,சனி, ராகு,கேது
                                              

துலாம்     சுக்ரன்      சனி        சூரியன்     செவ்வாய், புதன்               சந்திரன்
                                               குரு,ராகு-கேது

விருச்சிகம்  செவ்வாய்  ராகு-கேது  சந்திரன்     புதன் சுக்கிரன்                 சூரியன், குரு, சனி

தனுசு       குரு        **          **          சூரியன்,சந்திரன்,புதன்           செவ்வாய்
                                               சுக்கிரன் சனி ராகு-கேது               
                                                         
மகரம்       சனி      செவ்வாய்    குரு       புதன் ,சுக்ரன்,ராகு-கேது          சூரியன் சந்திரன் 

கும்பம்      சனி       **            **          சூரியன்,புதன்,குரு,சுக்ரன்        சந்திரன் செவ்வாய்
                                                                               ராகு, கேது.

மீனம்       குரு       சுக்ரன்      புதன்        சூரியன், சந்திரன், சனி         செவ்வாய்
                                                ராகு-கேது

ஜாதகம் கணிப்பதை அறிந்துக்கொண்டு ஜாதகத்தின் கிரக நிலைத் தன்மையை ஒட்டி அந்த ஜாதகர் பெறும் பலன்களைக் காண ஆரம்பிப்போம்

     ஒரு நாளில் எப்போது குழந்தை பிறந்தது என்பதை துல்லியமாக குறித்துக் கொள்ளவேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறுதினம் சூரிய உதயம் வரை ஒரு நாள் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதன்படி சூர்ய உதயத்திலிருந்து எத்தனையாவது நாழிகையில் குழந்தை பிறந்தது.  என்பதை சரியாக கணக்கிடப்  படாவிட்டால்   கண்டிப்பாக பலன்களில் மாறுதல்கள் உண்டாகி சரியான விவரத்தினை அறியாமல் போய்விடக்கூடும்.

முதலில் அன்றைய சூரிய உதயத்தினைக் கொண்டே நாழிகையைக் கணக்கிட வேண்டும். சூர்ய உதயம் என்பது பஞ்சாங்கங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும்,   இச்சூரிய உதயம் ஊருக்கு ஊர் மாறுபடும் எனவே
அவ்வூருக்கான அக்ஷாம்சம் என்ன என்று கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டும் இந்த விவரங்களும் பஞ்சாங்கங்களில் தெளிவாக கிடைக்கும்.   இனி குழந்தையின் இராசி, அதன் பாதநிலை  லக்கினம் என்பதை கணிக்கத் துவங்குவோமா?


Friday 22 May 2015

அதர்வண வேதம்.
                                                        ஈச நேசன் மகஸ்ரீ. [ 843843700 ]

        ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களில் நான்காவது நிலையில் உள்ளது அதர்வண வேதம். அதனால் ஏதோ இது பின்னாளில் உருவானது என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. எல்லா வேதமும் இறைவனால் அளிக்கப்பட்டு புத்தகம் அல்லது ஓலைச்சுவடிகள் இல்லாத அனாதிகாலம் முதற்கொண்டு ஒருவர் முகமாக இன்னொருவர் கற்று கடைபிடித்த ஞான சாரங்களே வேதம் எனப்படுகிறது.   வேதம் என்பதற்கு விஞ்ஞானம் என்றும் மேலான அறிவு எனவும் அர்த்தம்.  இது யுகம் யுகமாக மனித வழி வரும் நல்ல செயல்பாடுகளுக்கான ஏற்பாடு.

   ஒன்றாக இருந்த வேதத்தை மகாவியாசர் நான்காக பிரித்தார். எனவே அவர் வேத வியாசர் என்று அறியப்பட்டார்.  வேதமானது பலவித சாகைகளை தன்னகத்தே கொண்டது.  சாகை என்றால் கிளைகள் எனப் பொருள்படும். பிரிவுகள் என்றும் கொள்ளலாம்.

சிக்ஷா :         சொற்களை உச்சரித்தல்
சந்தஸ்:         சொற்களை பகுத்து பயன்படுத்துதல்
வியாகரணம் :   வேத சொற்களுக்கான இலக்கண அமைப்பு.
நிருக்தம்.:       பதம் பிரித்து சரியான பொருள் அறிதல்.
ஜ்யோதிஷம்:    வானியல் அறிவியல்
கல்பம் :        வேதங்களை எதற்கு எது எனப்பிரித்து அதை பயன்
                படுத்தப்பட ஏற்பட்ட மந்திர வகைகள்.

ரிஷிகள் என்பவர்கள் மிக்க அறிவுடையவர்கள் இவர்கள் பிரபஞ்ச அறிவுமிக்கவர்கள். வாழ்க்கை நெறிகளை முறைப்படுத்தி உலகோர் நலம் பெற ஆற்றல்மிக்க க்ருத்தை அளிப்பவர்கள்.  தற்போதைய விஞ்ஞானிகள் போல அறிவு ஜீவிகளாக அன்று இருந்தவர்கள்.

வேத வியாசர் ருக்வேதத்தை பைலரும், யஜுர்வேதத்தை வைசம்பாயனரும், சாமவேதத்தை ஜைமினியும், அதர்வண வேதத்தை சுனந்தரும் கற்றுத் தெளிந்து அவர்களின் சிஷ்யர்கள் மூலம் வழி வழியாக பயிற்றுவித்தனர்.

    ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களைப்பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதால் அதிக விவரம் தெரியாத வேதமான அதர்வண வேதம் பற்றி ஓரளவு அறிவோம்.

    1.ரிக்வேதம் மானுடர்களுக்கு இறைவனைத் தொழ ஏற்ற மந்திரங்களை தொகுத்து அளிக்கும் மூல நூல் ஆகும்.

    2. யஜுர் வேதம்  மானிடர்களுக்கு மந்திரங்களை சரிவர உச்சாடம் செய்வதும் கிரியைகள் பற்றியும் தெளிவாக்கி பயன் பாட்டுக்கு தருவது ஆகும்.

    3.சாம வேதம் என்பது அதனை இசைவடிவில் அளிக்கும் தன்மையானது. இதனால் இசைபாடி இறைவனை உடனடியாக ஈர்க்க இயலும் என்பதே.

மேற்படி மூன்று வேதங்களும் பரவலாக தற்போதும் அனுபவ நடைமுறையில் உள்ளது.

    4. அதர்வ வேதம்

    சுனந்தர் எனும் ரிஷியின் வாயிலாக வேதம் கற்றுணர்ந்த அதர்வன் என்னும் ரிஷியின் பெயராலேயே  அதர்வ வேதம் என வழங்கப்பட்டதாகவும் அறிகிறோம்.  அறியாமையை எரிக்கும் அதர்வ தத்துவமே இந்த வேதத்திற்கு பெயராகவும் அமைந்தது. 

   இவ்வேதத்தில் பல சாகைகள் [ கிளைகள் ] உண்டு.  சர்ப்பவேதம், பிசாச வேதம், அசுரவேதம், இதிஹாச வேதம், புராணவேதம், ஆயுர்வேதம், யந்திர தந்திர வேதங்கள்.   இவற்றிற்கும் பல கிளை வேதங்களுண்டு.

இவ்வேதத்திற்காக 31 உபநிஷதங்கள் உள்ளதாக அறியமுடிகிறது. அவையாவன:.

1.பிரஸ்னம்  2.முண்டகம், 3.மாண்டூகியம் 4.அதர்வசிரம் 5அதர்வசிகம் 6.பிரகத்சாபாலம் 7.நிருசிம்மஹத்தபணி, 8 நாரதபரிவிராஜம் 9 சீதா 10 சரமம் 11. மகானாராயணம் 12.ராமரகசியம் 13. இராமதாபணீ 14. சாண்டில்யம் 15.பிரம்மஹம்ஸ பரிவிராஜகம் 16. அன்னபூரணம் 17.சூரியன், 18 ஆத்மா 19.பாசுபதம் 20. பரப்பிரம்மம் 21. திரிபுரதாபணி 22 தேவி 23.பாவனம் 24.பஸ்மசாபாலம்  25.கணபதி 26. மஹாவாக்கியம் 27. கோபால தாபணீ 28.கிருஷ்ணம் 29 ஹயக்கிரீவம் 30 தத்தாத்ரேயம்  31 காருடம்.

     இருபது காண்டங்களாக வகுக்கப்பட்ட அதர்வண வேதம் 5847 மந்திரங்களைக் கொண்டது.  ஒன்றுக்கு பல அர்த்தங்களைத் தரும் வார்த்தைகள் பிரயோகிக்கப் படும் மந்திரங்கள் மிக்க ஆச்சரியத்தையே நமக்குத் தருகிறது. அமெரிக்கன், ஜெர்மன், ஆங்கிலம், வங்காளம் என பல  மொழிகளில் இதுபற்றிய விளக்கங்கள் மூல மொழிபெயர்ப்புகள் ஏராளம்.

     மற்ற மூன்று வேதங்களின் தன்மைகளும் இதில் அடக்கம். ஹிப்னாட்டிசம் என்னும் வசிய முறைகள், மண், தண்ணீர், போன்றவற்றைக் கொண்டு.அமுதம் அடையும் வழி, செல்வம் பெறுவதற்கான செய்கை, பெண் வசியத்தன்மையால் அவர்களை அடையும் வழி, மூலிகைகளால் வியாதிகள் குணமாக்கும் தன்மை ஆகியவைகள் அடக்கம்  இரகசிய குறிப்புகளால் இம்முலிகைகள் இனங்காட்டப் பட்டிருப்பதால் முறையான குருவழியாக மட்டுமே அறியலாம். அதுவும் எந்த அளவுக்கு இக்காலத்தில் சாத்தியம் என்பது புலனாகவில்லை.

    பாரத நாட்டில் உருவான இவ்வேத மந்திரங்களில் பல அற்புதங்கள் அடங்கியுள்ளது.  விஞ்ஞான வளர்ச்சிக்கு அறிய பல விவரங்கள் இவ்வேதத்தில் இருப்பதை உணர்ந்த மேலை நாட்டினர் குறிப்பாக ஜெர்மானியர்  ஆளில்லாத போர் விமான்ங்களை [ V-I , V-II, V-III ] உருவாக்கி குண்டுகளை அதில் நிரப்பி இங்கிலாந்தை தாக்கினார்கள் என்பதை அறியும்போது ஆச்சரியமடைகிறோம்.

   தற்போது விஞ்ஞானிகள் வாயிலாக் கண்டரியும் பாக்டீரியாக்கள் நுண் கிருமிகள் பலவும் வேதத்தில் காணப்படும் மூலிகையால் குணமாக்க இயலும்.  லூயி பாய்ச்சர் ஆராய்ந்தறிந்த ஜீவ அணு விஞ்ஞானம் [ Micro biology ] பெருமைக்குறியதாக  கருதுகிறோம்.  இத்தகைய நுண்கிருமிகள் பலவற்றைப் பற்றி கூறி அதனை மூலிகையால் போக்கும் வழியும் விளக்கப் பெற்றுள்ளது.

   உதாரணமாக--  அதர்வண காண்டம் 2 சூக்தம்31ல் நம்மைத் தாக்கும் கிருமிகளைக் கண்டறிந்து அதனை நம்மைவிட்டு நீங்கும் தன்மையையும் விளக்கியுள்ளது. அதன்படி சிலவகை மண்களால் நோய்கள் அறவே  நீக்கலாமென்றும் மூலிகை கொண்டு விஷ முறிவும் செய்யலாமென்றும் குறிப்புகள் உள்ளது.
      இத்தைகைய விவரங்களை அதர்வண வேதத்தில் மணி, மந்திர, ஒளஷத சித்திகள் என விவரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இவ்வேதத்தில் காட்டப்பட்டுள்ள சில சிகிச்சை முறைகள் அனுஷ்டிக்கப்பட்டால் குணமாகலாம் என்பதும் தெளிவு. அவைகள் அதர்வணீ, ஆங்கீரஸீ, தைவீ, மானுஷீ எனப்படும்.

அதர்வணீ :  இது முன் வினைகள் தீர குறிப்பிட்டுள்ள பிராயச் சித்தவழிகள். தவம், யாகம், தானம், ஸ்வஸ்திவாசனம், அவசேஸனம், அவமார்ஜனம், ஸ்நானம் ஆகியவை.

ஆங்கிரஸீ  :மனம் சம்பந்தப்பட்ட மானசீக சக்திகள் பன்படுத்துதல்.

தைவீ  :   வாயு, நிலம், நீர், சூரிய கிரணங்கள் போன்ற இயற்கைச் சக்திகள் கொண்டு சிகிச்சைகள்.  

மானுஷீ: மருத்துவர்கள் மூலிகைகளால் சிகிச்சை தரத்தேவையான மருந்துவகைகள் பற்றிய தகவல்கள்
  
சாந்தி கர்மாக்கள் எனும் மந்திரங்களால், பூத, பிசாச, சுந்தர்வ, யாதுதான, ராக்ஷச, பிரம்ம கணங்களால் உண்டாகும் உன்மத்தம் [ மனோவியாதி, பைத்தியம் ] ஆகியவற்றுக்கும் தீர்வு தரும் மந்திரங்கள் கர்மாக்கள்.

ரக்ஷோஹம்:  .  கொல்லுதல், கட்டுதல், துன்புறச் செய்தல், மனம் தடுமாறச் செய்தல், நாசம் நிகழ்த்துதல், பச்சை ரத்தம் அருந்துதல், பலியிடல், தீங்கு செய்தல், ஆகியவற்றிற்கான நலம் கூட்டும் மந்திரங்கள்.

அதர்வண வேதம் மேலும் சில நன்மைகளையும் பயன்பெறும் வழிகளையும் தனித்துவமாய் கூறுவதாகவே உள்ளது.

விரோதிகளை தம்வழியாக்கல். நமக்கு பணிவிடை செய்யும் தகுதிக்கு அவர்களை உருவாக்குதல். விரோதம் ஒழித்தல்.

பெண்கள் இல்லறவியல், வாழ்வியல் பற்றியும் இதில் அடக்கம்.
பெண்கள் ஏற்கவேண்டிய கடமைகள். 

அதிதிகளை உபசரித்தல்
புத்திரர்கள் வேண்டும் எனும் எண்ணம்
முடியாது என்று கருதாமை
வருங்கால வளமை
அன்னம் தயாரித்தல்
திருமண பந்தம் பெண்மையை உயர்வாக வைக்கிறது.

நல்ல உணவுகள்,தீமைதரும் உண்பதற்கு லாயக்கற்ற தாவரங்கள் போன்ற அனைத்து விவரங்களும் அதர்வணத்தில் காணக் கிடைக்கிறது.

வாழ்க்கையின் செழுமையில் நெய்யின் பங்குபற்றி அதிகமாகவே இதில் காணப்படுகிறது. உணவுத் தன்மையிலும், உடல் பாதுகாப்புத் தன்மையிலும் அவசியமாகிறது.

மனித மரணத் தன்மையில்  மரண சாதனமாக இவ்வேதத்தில் கூறப்பட்டி ருப்பது காண்போம்.

1காலபைரவன் 2. நரி, 3. ஈக்கள் 4. காகங்கள் 5. ஆயுதங்கள் 6.வில்லும் அம்பும் 7. மின்னல், 8. இடி, 9.வெள்ளம், 10. நெருப்பு, 11.ஜ்வரம், 123 ஷயம் 
எனவே இவற்றிலிருந்து ஒதுங்கியே இருத்தல் அவசியம்.

பரமேஸ்வரன், பசுபதி, ருத்ரன் என இறைவனை குறிப்பதுடன் ருத்ரன் ஆட்சியில் உலகம் இயங்குவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.உலக படைப்பளியான இவரே அழிவின் அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிவன் எல்லாமுமாகும் என தெரிவிக்கிறது.

வாழ்வின் தத்துவம் பிராணன் என்பதை பரமேஸ்வரருடைய ஜீவ சக்தி என்றே இதன் சூக்தம் கூறுகிறது. இதற்கான பிராணாயாமம் பூரகம், ரேசகம் என்றும் உள்ளிறுக்கும் பிராணக் காற்று கும்பகம் என்றும் வெளியில் இருக்கும் கும்பகக் காற்று ஆஸினம் எனவும் அழைக்கப்படுகிறது.

பிராணன் அபானன் பற்றியும் இச்சூக்தங்கள் பேசுகின்றது.நாசிவழியேகி இதயம் அடைவது பிராணன். தொப்புளுக்கு கீழ்முதல் உயிர் நிலைவரை தன் பணி தொடர்கிற காற்றுவகை இது அபாணன். பிராண சக்தி உடல் காக்கும் என்பதால் அதனை நாம் தொழுதல் அவசியமாகிறது. பிரானண் இல்லையென்றால் உறுப்புகள் செயல்படாது.  பிராண உபாசனை ருத்ர உபாசனை போன்றது.

பிரம்மச்சர்யம், இந்திரிய கட்டுப்பாடு, உழைப்பு, உன்னதம் இவைகளைப் பற்றி
சொல்லும் இந்தவேதம் நாம் தொழவேண்டிய தேவதைகள் பற்றியும் விவரிக்கிறது. பூமியில் வசிக்கும் தேவதைகள் 48 வானில் வசிக்கும் தேவதைகள் 23 அந்தரிக்ஷத்தில் 20 என 91 தேவதைகளைப் பட்டியல் இடுகிறது. தேவதைகளைச் சொல்லி அதன் வழிபாட்டை வற்புறுத்துகிறது.

        சூரியனைச் சொல்லும் இவ்வேதம் சோமன் என்னும் சந்திரனையும் பற்றியும் சொல்கிறது. சோமன் என்பது நிலவு என்னும் சந்திரனாகும். தாரகை எனும் நட்சத்திரங்களுக்கு இடையையில் உலாவரும் நிலவு சூரியனின் ஏழு கிரணங்களை  ஏற்று ஒளிர்கிறது. சோமபானம் என்பது குளிர்ச்சி தர வல்லது இப்பானத்தை தருவதன் மூலம் சகலசெல்வம் கிட்டும் என இவ்வேதம் சொல்வதுடன் இந்த சோம பானம். எல்லோராலும் அடைய முடியாத ஒன்று எனக் கூறுகிறது.  இது சிலர் கூறுவதுபோல மதி மயக்கும் மது அல்ல. இது பலவித மூலிகைகளின் சாறுஆகும். இது ஒரு உணவு வகையே. புலால் ரத்தம் முட்டை என்பவைகளை வேத காலம் ஏற்றதில்லை. இல்லறம் துவங்கும் திருமண வைபவம் பற்றியும் இதில் காணப்படுகிறது.

    பித்ருக்களின் உலகம் பற்றியெல்லாம் தகவல்கள் உள்ள இந்த அதர்வண வேதத்தின் பெரும்பாலானவைகள் காணாமல்போய் சுமார் 400 வருடங்களைக் கடந்திருக்கும் என காஞ்சி மகா பெரியவர் கருத்து பதிந்துள்ளார்கள்.

        இத்தகைய வேதத்தை தமிழகத்தில் எவரும் கற்பதில்லை. அதர்வண வேதத்தவரும் இங்கில்லை.   பாரதத்தில் வடக்கு ஒரிசாவில் குஜராத்தில் சிலர் மட்டுமே அதர்வணர்கள்.  திண்டிவனம் அருகமைந்த பேரணி, எண்ணாயிரம் எனும் ஊர், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுகள்படி 300, 400 ஆண்டுகளுக்குமுன்னர் அதர்வண வேதம் கற்றவர்கள் பலர் இருந்ததாக அறியமுடிகிறது.

       அதர்வண வேதத்தின் தன்மைகளை எழுதவேண்டுமானால் அது பல பக்கங்களை கொண்டதாகிவிடும்.  

       வேதங்களை அதன் உண்மைத் தன்மையை மட்டுமாவது அறிய முயற்சிக்கலாமே என்பதால்  இது சிறு விளக்கம்தான். முழுவதும் உணரவேண்டுமானால்  அது கடலுக்கு ஒப்பாகும்.